பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 400

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், அவர்களை நினைத்து நாடே பெருமைகொள்வதாகவும் எக்ஸ் வலைத்தளத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், ஹாக்கி, ஈட்டி எரிதல் விளையாட்டுகளில் ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments