கால்பந்து போட்டியில் தோல்வி அடைந்த மாணவர்கள்.. அடித்து உதைத்த உடற்கல்வி ஆசிரியர்

0 306

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கால்பந்து அணி மாணவர்கள், பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் உட்கார வைத்து, பிற மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, ஷூ காலால் உதைத்து, தலை முடியைப் பிடித்து, கன்னத்தில் அறையும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments