சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் விடுதலை.. தீர்ப்பைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டு அழுகை..!

0 967

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது கணவர் ஹேமந்த் உள்ளிட்ட 7 பேரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அறையில் இருந்து சித்ரா சடலமாக மீட்கப்பட்டார். அப்போது உடன் இருந்தவர் என்பதால், சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், கைது செய்யப்பட்ட ஹேமந்த் எதிரான வழக்கில், குற்றத்தை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி ரேவதி ஹேம்நாத்தை விடுதலை செய்தார்.

தீர்ப்பைக் கேட்டதும் ஹேமந்த் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments