அதிக திறன் கொண்ட உயர் ரக 20 பைக்குகள் பறிமுதல்.. அபராதம் விதித்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார் ..!

0 408

காரைக்காலில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட அதிக திறன் கொண்ட விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

அதிக சப்தத்துடன், நம்பர் பிளேட்கள் இன்றியும் தலைக்கவசம் அணியாமலும், வேக கட்டுப்பாட்டை மீறியும் ஓட்டப்பட்ட 20 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தமிழகத்தின் திருவாரூர், வேலூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஓட்டி சென்ற பைக்குகளும் பிடிபட்டதாக காரைக்கால் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments