போதையில் லஞ்ச வசூல் - அடாவடிக்காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

0 332

திருச்சி, பொன்மலை சர்வீஸ் சாலையில் மது போதையில், இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டதாக புலிவலம் காவல் நிலைய தலைமை காவலர் சந்தோஷ் குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் மீது மது வாடை வீசியதால், சந்தேகமடைந்த சில வாகன ஓட்டிகள், டிவிஎஸ் டோல்கேட் அருகே இருந்த காவலர்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments