விழுப்புரம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழப்பு... மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

0 369

திருட்டு வழக்கில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி அற்புதராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருட்டு வழக்கில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், இன்று காலை நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments