ராசிபுரத்தில் மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநரை மடக்கி பிடித்த டி.எஸ்.பி

0 384

ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு 50 பயணிகளுடன் புறப்பட்ட அருள்முருகன் என்ற பேருந்து தாறுமாறாகச் செல்லவே சில பயணிகள் அதிலிருந்து இறங்கி போலீஸில் புகாரளித்தனர்.

உடனடியாக, டி.எஸ்.பி விஜயகுமார் தனது வாகனத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அந்த பேருந்தை மடக்கினார். ஓட்டுநர் சிவகுமார் மதுபோதையில் இருந்ததோடு, குளிர்பானத்தில் மது கலந்து இருக்கையின் அருகே வைத்திருந்ததும் தெரிய வரவே பேருந்தை பறிமுதல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments