எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் 3 பேர் மாவுக்கட்டுடன் சிறையில் அடைப்பு

0 349

சென்னை எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மாவுக் கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வா.உ.சி. நகரைச் சேர்ந்த சிவா என்ற ஆட்டோ ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக தாழங்குப்பம் ஆற்றுப் பகுதிக்கு சென்ற போது, அங்கு மது போதையில் இருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் சந்தோஷ், அருண் குமார் மற்றும் ரமேஷ், தங்களைப் பார்த்து பயப்பட மாட்டாயா என்று கேட்டு தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மூவரும் சத்தியவாணி முத்து நகர் சுடுகாட்டில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்து சென்றதாகவும், தங்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்ற போது மூவரும் தவறி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments