மதுரை மாவட்டம் மேலூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டிச் சென்று கன்ட்டெய்னர் லாரி மீது மோதிய கார்

0 327

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டவேரா கார் ஒன்று கார் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசையில் சென்ற கண்ட்டெய்னர் லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணித்த ஆனந்த், மகாமுனி ஆகியோர் படுகாயமடைந்தனர். நொறுங்கிய காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதிவேகமாகச் சென்றதே கார் கட்டுப்பாட்டை இழக்கக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments