திருச்சி மாவட்டம் மதுபோதையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய நபருக்கு போலீசார் வலைவீச்சு

0 294

திருச்சி மாவட்டம் வைரிசெட்டிபாளையத்தில் ரேஷன் கடையில் பாமாயில் கேட்டு மதுபோதையில் தகராறு செய்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்த நபரை உப்பிலியபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

ரேஷன் கடையில் கடந்த மாதத்திற்கான பாமாயில் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், செந்தில் என்பவர் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில் வழங்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மாதத்திற்கான நிலுவை வழங்கப்பட்ட பிறகே இம்மாதத்திற்கான தவணையை வழங்க முடியும் என கூறிய விற்பனையாளர் சாந்தியையும், எடை தராசு, பதிவேடு நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் செந்தில் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments