படகிலிருந்து தவறி விழுந்து நடுக்கடலில் 13 மணி நேரமாக தத்தளித்த மீனவர்களை மீட்ட காரைக்கால் மீனவர்கள்

0 284

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து 13 மணி நேரமாக உயிருக்கு போராடியபடி தத்தளித்த நாகப்பட்டினம் மீனவரை காரைக்கால் மீனவர்கள் காப்பாற்றினர்.

அக்கரைப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முருகன் உள்ளிட்ட 11 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடல் கொந்தளிப்பால், படகின் பக்கவாட்டில் இருந்த முருகன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 2 மணிக்கு கடலில் விழுந்து நீந்தியவாறு உயிருக்கு போராடிய முருகனை காரைக்காலை சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்கள் காப்பாற்றி முதலுதவி அளித்து, அக்கரைப்பேட்டையை சேர்ந்த மற்றொரு விசைப்படகு மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments