தஞ்சாவூரில் பின்னால் கல்லூரி பேருந்து வருவதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக, பைக்கில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

0 462

தஞ்சாவூர் காந்திஜி சாலையில், தலைக்கவசம் அணியாமல், பின்னால் கல்லூரி பேருந்து வருவதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக, சாலையை பைக்கில் கடக்க முயன்றவர் மீது, எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதியது.

அதில் நிலைதடுமாறி விழுந்த நொடிப்பொழுதில், பின்னால் இருந்து வந்த கல்லூரி பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கீழவாசல் குறிச்சி தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்று தெரியவந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியதும், விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments