புதுச்சேரி மீனவர்கள் தாக்கியதில் பழவேற்காடு மீனவர்கள் 10 பேர் காயம்

0 285

புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததாகவும், அதனை பழவேற்காடு மீனவர்கள் எதிர்த்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த புதுச்சேரி மீனவர்கள் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் பழவேற்காடு மீனவர்களை கடுமையாக தாக்கியதாகவும், இதனால் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே கடலூர், புதுச்சேரி மீனவர்கள் பழவேற்காடு கடலில் மீன் பிடித்த விவகாரத்தில் 40 பேரை சிறைபிடித்து வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments