டெல்லி மாநகராட்சி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு... 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம்

0 335

டெல்லி மாநகராட்சி கவுன்சிலில் 10 நியமன உறுப்பினர்களை அமர்த்த துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநகராட்சியில் தேர்தல் மூலம் 250 கவுன்சிலர்களும் 10 நியமன உறுப்பினர்களும் இருப்பது நடைமுறையாக உள்ளது.

தற்போது மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 பேரும், பாஜகவிற்கு 104 பேரும் உள்ளனர். இந்த நிலையில் நியமன உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி சபையை சீர்குலைக்க முயற்சி நடக்கலாம் எனக்கூறி ஆளுநரின் அதிகாரத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆளுநருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments