மாநகராட்சி குப்பை லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்த ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

0 235

சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும்படி மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

நிரந்தர மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் சிலர் பணியில் இருப்பதாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, சொந்த வேலைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

அவர்கள் இயக்க வேண்டிய வாகனங்கள் முடங்கி கிடப்பதால் தூர்வாருதல், கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றுவது, சாலையில் சுற்றித் திரியும் மாடு, நாய் பிடிப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments