நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்...

0 389

சென்னை, கொளத்தூரில் உள்ள ப்ளூ சீல் என்ற தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில், நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ்  ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் - ராணி தம்பதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர்  சிறப்பு குழந்தையாக இருந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று நீச்சல் பயிற்சியின்போது கீர்த்தி சபரீஸ்கர் நீரில் தத்தளித்ததாக அவரது தாய் ராணி, பயிற்சியாளர் அபிலாஷிடம் தெரிவித்தபோது, அப்படி இருந்தால்தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறி காப்பாற்றவில்லை எனக்கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் குளத்தில் மிதந்தபடி அசைவின்றி இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், கீர்த்தி சபரீஸ்கர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments