புதுச்சேரி சென்ற பேருந்தில் கூட்ட நெரிசலில் பெண்ணிடம் முதியவர் சில்மிஷம்... தர்மஅடி கொடுத்து கீழே இறக்கி விட்ட பயணிகள்... செங்கல்பட்டு

0 460

சென்னையில் பணியாற்றும் இளம் பெண் புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறி சொந்த ஊரான மாமல்லபுரம் சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட 60 வயது நபருக்கு தர்ம அடி விழுந்தது.

தள்ளி நிற்குமாறு கேட்டுக்கொண்டும் முதியவர், தொடர்ந்து தொல்லை கொடுத்தால், உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள், பேருந்து வந்து நின்றதும் முதியவரை கீழே இறக்கி தர்மஅடி கொடுத்தனர்.

பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் முதியவர் மன்னிப்பு கோரியதால் அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் வேறு ஒரு பேருந்தில் ஏறி அவர் புதுச்சேரி சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments