இரவு நேரத்தில் வீடுகளின் மீது கல்வீசி அச்சுறுத்திய நபர் கைது - கிராம மக்களே மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

0 476

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிங்கிரிபாளையத்தில் ஒரு வாரமாக இரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்களை வீசி மக்களை அச்சுறுத்தி வந்த நபரை கிராம மக்கள் மடக்கி பிடித்து கடத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இவர், அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் நிர்மல்ராஜ் என்பது தெரியவந்தது.

இரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்களை வீசிவிட்டு அருகில் உள்ள இருட்டு நிறைந்த காட்டுப் பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொள்வதை நிர்மல்ராஜ் வாடிக்கையாக கொண்டிருந்ததாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments