2029ஆம் ஆண்டு தேர்தலிலும் இண்டியா கூட்டணி எதிர்க்கட்சி தான்: அமித் ஷா

0 365

2029ஆம் ஆண்டிலும் இண்டியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என்றும், மோடியே பிரதமராக வருவார் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புவதால் தான் பா.ஜ.க. அரசு நீடிக்காது எனக் கூறிவருவதாக விமர்சித்தார்.

இந்த பதவிக்காலத்தை பா.ஜ.க. முழுமையாக நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா கூறினார். மேலும், எப்படி பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது குறித்து இண்டியா கூட்டணி கற்றுணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments