சோதனையின்போது கல்லாவில் இருந்த பணத்தை எடுத்த மதுவிலக்கு காவலர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

0 390

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குறிச்சியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி டாஸ்மாக் பாரில் சோதனை செய்யச் சென்ற மதுவிலக்கு பிரிவு காவலர்கள் கல்லாவில் இருந்த பணத்தை பறித்து சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர் சோதனை செய்ய சென்றபோது அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை விரட்டிவிட்டு முதியவர் ஒருவர் பையில் வைத்திருந்த 400 ரூபாய் பணம் மற்றும் கல்லப்பேட்டியில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மதுவிலக்கு காவலர்கள் பறித்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments