சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219ஆவது நினைவுதினம்... தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

0 242

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219ஆவது நினைவுதினத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் அவரது நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு அமைச்சர் நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த ஓடாநிலையில், மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஓடாநிலையில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் முத்துசாமி, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன், கொங்கு மக்கள் தேசியக்கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments