விருதுநகர் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

0 422

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம், மேலநீலிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் நல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை நெல்லையில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.

தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments