மயிலாடுதுறையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் அமர்ந்திருந்த எஸ்.எஸ்.ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு

0 382

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.

பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோட முயன்றதாக அதேபகுதியைச் சேர்ந்த கலைவேந்தனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கலைவேந்தனை கைது செய்து நடத்திய விசாரணையில், எஸ்.எஸ்.ஐ கணேசனின் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததும் இதனை கண்டித்ததால் அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியதாகவும் கலைவேந்தன் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments