பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

0 375

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 2019-ல் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில், தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராமலிங்கம் கொலைக்கு மதமாற்றம் தொடர்பாக மோதலே காரணம் எனக்கூறி தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவ்வழக்கில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலம், அவர்களது வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments