கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1,23,376 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

0 295

மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 376 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 56 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 500 கனஅடி, கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கனஅடி நீரும் பாசனத்துக்காகத் திறக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments