வாகனத்துக்கு வழிவிடுவதில் தகராறு.. திருப்புளியால் குத்தி ஒருவர் கொலை..!

0 465

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்துக்கு வழிவிடுவது தொடர்பான தகராறில் ஒருவர்  திருப்புளியால் குத்திக் கொல்லப்பட்டார்.

ராசிங்காபுரத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர்  இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் பின்னால் ஹாரன் அடித்துக் கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது. "வேண்டுமானால் ஒதுங்கிப் போக வேண்டியதுதானே" என குபேந்திரன் கூற, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சூர்யாவை குபேந்திரன் அடித்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து குபேந்திரனைத் தேடிச் சென்ற சூர்யாவின் குடும்பத்தினர், மெக்கானிக் கடையில் அமர்ந்திருந்தவருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சூர்யாவின் தம்பி முத்துக்குமார் அங்கிருந்த திருப்புளியை எடுத்து குபேந்திரன் வயிற்றில் குத்தியதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments