சாதியால் பிரிந்த 5 ஆண்டு ஃபேஸ்புக் காதல்.. திருமணம் செய்ய மறுத்த கப்பல் பொறியாளர் கைது..!

0 546

5 வருடமாக காதலித்த ஃபேஸ்புக் காதலியை சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததாக கப்பலில் வேலைப்பார்த்து வந்த பொறியாளரை போலீஸார் கைது செய்தனர்.

மும்பையில் வேலை பார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்வரனும், சென்னையில் வேலை பார்த்து வரும் தஞ்சையைச் சேர்ந்த பி.இ பட்டதாரி பெண்ணும் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. விக்னேஷ்வரன் சென்னைக்கு வரும்போதெல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலுக்கு பெற்றோர் சம்மதத்தை வாங்கிய அந்தப் பெண், திருமணம் செய்துக் கொள்ளலாம் என காதலனிடம் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு விக்னேஷ்வரன் மறுத்ததால் தாம்பரம் போலீஸில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். சிறைக்குச் சென்றாலும் பராவாயில்லை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிய விக்னேஷ்வரனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments