பணத்திற்காக பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கு-தேடப்பட்டு வந்த ரவுடி ஐகோட் மகாராஜா கைது

0 406

மதுரையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை தனிப் படை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 4 பேரை கைது செய்து விசாரித்தபோது மாணவனின் தாய் ராஜலட்சுமிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சூர்யா என்பவருக்கும் விரோதம் இருந்து வந்ததால் ஐகோர்ட் மகாராஜா உதவியுடன் மாணவனை கடத்தியது தெரியவந்தது.

இதில் சூர்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஐகோர்ட் மகாராஜாவை கோயம்புத்தூரில் வைத்து நேற்று கைது செய்த தனிப் படை போலீசார் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், அப்போது துப்பாக்கி ஒன்றையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடத்தலின்போது ஐகோர்ட் மகாராஜா மாணவனின் தாயை மிரட்டியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments