கை தவறிய செல்ஃபோனை பிடிக்க முயன்ற இளைஞர் 70 அடி ஆழமுள்ள கல்குவாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

0 488

தாம்பரம் அருகே எருமையூரில் கல்குவாரி பாறை மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த செல்ஃபோனை பிடிக்க முயன்ற இளைஞர் சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அதேப் பகுதியில் தங்கியிருந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் தனது கையிலிருந்து நழுவிய செல்ஃபோனை பிடிக்க முயன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நீர்மூழ்கி கருவிகளுடன் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஜெயராமன் உடல் மீட்கப்பட்டது.

சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் விழுந்ததால் அவருக்கு தண்ணீரிலேயே அடிப்பட்டு மயக்கம் அடைந்து மூழ்கியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments