காஞ்சிபுரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

0 394

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் சாலையோர திறந்த வெளியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்தியதில், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக எடுத்து வரப்பட்ட ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணாக தரையிறக்கப்பட்டது தெரிய வந்தது.

ஹெலிகாப்டரில் ஒரு பைலட், பயிற்சி பைலட் இருந்த நிலையில் அவர்கள் பத்திரமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் மற்றொரு ஹெலிகாப்டரில் வந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டர் பழுதை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments