திருவெறும்பூர் அருகே நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற 4 தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

0 369

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெல் நிறுவனம் அருகே உள்ள கணேசா ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற 4 தனியார் பேருந்துகளுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது.

பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் மேலே செல்வதாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், வாகன தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments