சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு

0 406

சென்னை முன்னாள் காவல் ஆணையரும், காவலர் வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபியுமான ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கே.விஸ்வநாதன் கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.

தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, உளவுப் பிரிவு, அமலாக்கம் என பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தவர், சிபிஐ-யிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2017-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற ஏ.கே.விஸ்வநாதன், மூன்றாண்டுகளில் சென்னை முழுவதும் 2.7 லட்சம் சிசிடிவிக்களை நிறுவினார்.

மூண்றாம் கண் எனும் திட்டத்தின் மூலம் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் சிசிடிவிகளை அமைக்கும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றினார்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments