சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது

0 473

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் 2 மகள்களுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவும் குடித்துவிட்டு போதையில் மனைவி, மகள்கள் மற்றும் மருமகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் பஞ்சவர்ணம் அரிவாளால் கருப்பசாமியை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். சத்தம் கேட்டு சென்று பார்த்த கருப்பசாமியின் தங்கை கொடுத்த  தகவலையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments