ஆரணியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பைக் திருடிய நபர் கைது 3 பைக்குகள் பறிமுதல்

0 277

ஆரணியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பைக் திருடிய நபர் சிக்கினார். சில நாட்களுக்கு முன்பு இந்தியன் வங்கி முன்பு சுரேஷ் என்பவர் தனது பைக்கை நிறுத்திச் சென்றார்.

திரும்பி வந்த பார்த்த போது பைக் திருடு போயிருந்தது.  இதனால் ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் வாகன சோதனையில் நிறுத்தாமல் வேகமாகப் போன நபரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

ஆரணி களம்பூர் சேத்பட் ஆகிய பகுதிகளில் 3 பைக்குகள் திருடியதை தனுஷ் என்ற அந்த நபர் ஓப்புகொண்டார். பின்னர் அவனிடமிருந்து 3 பைக்குள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments