சுமார் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமீன்: கரூர் நீதிமன்றம்

0 363

சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த காட்டூரை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

அவர் தொடர்ந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, காலை, மாலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திடவும், மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments