திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு கடைகள் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்

0 362

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி , அப்படியே சாலையில் போட்டு சென்றதாக வியாபாரிகள் புகார் கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னை பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் தனியரசு பேச்சுவார்த்தை  நடத்தி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து வியாபாரிகள்  போராட்டத்தை கைவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments