டாஸ்மாக் பாரில் பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்தியதாக திமுக பேரூராட்சி மன்றத் தலைவரின் மகன்

0 600

தேனி மாவட்டம் தேவாரத்தில் டாஸ்மாக் பாரில் பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்தியதாக திமுக பேரூராட்சி மன்றத் தலைவரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவாரம் பேரூராட்சி மன்றத் தலைவர் லட்சுமியின் கணவர் பால்பாண்டி டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.

இந்த பாருக்கு மது அருந்தச் சென்ற பேரூராட்சி ஏழாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் ரமேஷ் என்பவர், பாட்டிலுக்குக் கூடுதலாக வசூலித்த 10 ரூபாய் குறித்து தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பால்பாண்டியின் மகன் பாண்டிச் செல்வம் கஞ்சா போதையில் ரமேஷை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments