சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸி பிக்கப் பாயிண்ட் இடமாற்றம் என அறிவிப்பு - ஓட்டுநர்கள் போராட்டம்

0 370
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸி பிக்கப் பாயிண்ட் இடமாற்றம் என அறிவிப்பு - ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வந்த கால் டாக்ஸி பிக்கப் பாயின்ட்டை, ஏரோப் மூன்றாவது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கீழ்தளத்திலுள்ள பிக்கப் பாயிண்ட்டில் காத்திருப்பதால் அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

உடல்நிலை குறைவானவர்கள், வயதானவர்களே டாக்ஸிகளை அதிகமாக பயன்படுத்துவதால் அவர்களால் மூன்றாவது தளத்திற்கு செல்ல முடியாது என ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் வாகனங்களை இயக்கப் போவதில்லை என ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments