தொடக்க கல்வி ஆசிரியர்கள் 31 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகம் முற்றுகைப் போராட்டம்

0 311

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் டி.பி.ஐ நுழைவுவாயில் முன்பு தடுப்புகள் வைத்து காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments