குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்... லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

0 378

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழு உதகை சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, கோவை நோக்கிச் சென்றபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் யாருக்கும் பெரிய அளவில் காயமில்லை என்று கூறப்படும் நிலையில், மலைப்பாதை இறக்கத்தில் இரண்டாவது கியரில் வராமல் 3 மற்றும் நான்காவது கியரில் வந்ததாகவும் அடிக்கடி பிரேக்கையும் அழுத்தியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments