தூங்கி கொண்டிருந்த மனைவியைக் கொன்ற கணவன் கைது

0 680

தென்காசி மாவட்டம் மாறாந்தை கிராமத்தில் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொன்றுவிட் தப்பியோடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கணேசன்- முத்துலெட்சுமி தம்பதிக்கு 8 குழந்தைகள் உள்ள நிலையில், மதுபோதைக்கு அடிமையான அவர் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கணேசன் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவரது சகோதரியிடம் மனைவி முத்துலெட்சுமி பணம் வாங்கிவிட்டு திருப்பிதரவில்லை என்றுக் கூறி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மகளுடன் மாடியில்  தூங்கச் சென்றவரின்தலையில் சிலிண்டரை போட்டுக் கொன்றதாக போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments