இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி மீது ஹெஸ்பொல்லா தாக்குதல் - 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டோர் 12 பேர் பலி

0 423

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் குன்றுகளில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹெஸ்பொல்லா போராளிகள் வீசிய ராக்கெட் விழுந்து வெடித்ததில் சிறுவர்கள் உள்பட 12 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

1967-ஆம் ஆண்டு, அரபு நாடுகள் உடன் நடந்த யுத்தத்தின்போது, சிரியாவுக்கு சொந்தமான கோலன் குன்றுகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. இஸ்ரேலியர்கள், அரேபியர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் அங்கு வசித்து வருகின்றனர்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 4 போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக ஹெஸ்பொல்லா போராளிகள் 30 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒன்று கால்பந்து மைதானத்தில் விழுந்து வெடித்தத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 12 பேர் இறந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments