பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் காலை 10.15 - மதியம் 1.30 மணி வரை ரத்து

0 314

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மற்றும் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக இன்றும் நாளையும் காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை இருமார்க்கத்திலும் 20 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி இடையிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments