தனியார் பயிற்சி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரும்பு ராடுகள், கட்டைகளால் தாக்கிக் கொண்டதில் பலர் காயம்

0 366

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு பகுதியில் செயல்படும் கடல்சார் தனியார் பயிற்சிக் கல்லூரி விடுதியில் உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.

15க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரும்பு ராடு, கண்ணாடி பாட்டில்கள் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், இரண்டு பேருக்கு மண்டை உடைந்தும், பலருக்கு காயம் ஏற்பட்டது.

மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த 20 நாட்களில் இரண்டாவது முறையாக மோதி கொண்டு  காயங்களோடு மருத்துவமனையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments