கத்திபாரா மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை.. டி.என்.பி.எல் வாய்ப்பு கிடைக்காததால் கிரிக்கெட் வீரர் எடுத்த விபரீத முடிவு..?

0 708

சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து இறந்தது பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான சாமுவேல்ராஜ், இளைஞர்கள் சிலருக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் கத்திபாரா மேம்பாலத்தின் மீது ஏறிய அவர், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார்.

இதில் அவர் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சாமுவேல்ராஜின் செல்போனை அவ்வழியாகச் சென்ற ஒருவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட 2 ஆண்டுகளாக சாமுவேல்ராஜ் முயற்சித்து வந்ததாகவும் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments