தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி

0 535

தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய பிறகு, உயிரை விட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த சேமலையப்பன், புதன்கிழமை அன்று பள்ளி நேரம் முடிந்தவுடன் 20 குழந்தைகளை அழைத்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சாமர்த்தியமாக சாலையின் ஓரம் பேருந்தை நிறுத்திய பிறகு அவரது உயிர் பிரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments