கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவன் பலி

0 346

சென்னையில், இரவு 10 மணி அளவில், நண்பர்களை சந்திக்க தாயாரின் டியோ பைக்கை எடுத்துச் சென்றதாக கூறப்படும் 12-ஆம் வகுப்பு மாணவர் சுகனேஷ்வர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

வடபழனி மெட்ரோ மேம்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாடை இழந்த டியோ பைக், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

ஹெல்மெட் அணியாத நிலையில், தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments