அய்யர்மலையில் அந்தரத்தில் நின்ற ரோப் காரில் இருந்த பக்தர்கள் மீட்பு...

0 390

கரூர் மாவட்டம், அய்யர்மலையில் கம்பிகள் தடம் புரண்டதால் இறங்குமிடத்திற்கு அருகாமையில் அந்தரத்தில் நின்ற ரோப் காரில் இருந்த பக்தர்களை கோயில் பணியாளர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கினர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ரோப்கார் சேவையை சேவை துவக்கி வைத்ததையடுத்து பக்தர்கள் அதில் பயணித்து வருகின்றனர்.

மலையிலிருந்து கீழே இறங்கும் இடத்திற்கு சிறிது தூரம் இருக்கும் போது காற்று அதிகமாக வீசியதால் கம்பிகள் தடம் புரண்டதையடுத்து பழுது சரிசெய்யப்பட்ட நிலையில், ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments