இ-சேவை மையத்திற்க்கு வந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய உரிமையாளர் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்

0 531

தேனி மாவட்டம் சிலமலை கிராமத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் உறவினர்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சாலையிலேயே சமைத்து உண்டு விடிய விடிய மறியல் போராட்டம் செய்தனர்.

இ-சேவை மையம் நடத்தி வந்த லட்சுமணன் என்பவர், கடைக்கு வந்த பெண் ஒருவரின் வாட்சப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாகவும் அதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் லட்சுமணனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அவமானம் தாங்காமல் லட்சுமணன்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று மதியம் ஒரு மணி தொடங்கி, போடி - தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments