விசாரிக்க சென்ற இடத்தில் பெண்ணை சுட்டுக் கொன்ற போலீஸ்

0 732

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் தனது வீட்டிற்குள் யாரோ புகுந்து விட்டதாகக் கூறி போலீசை அழைத்த பெண்ணை போலீஸ் அதிகாரி சுட்டுக் கொன்றதற்கு அதிபர் பைடன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

சோன்யா மாசே என்ற 36 வயது பெண்ணின் அழைப்பின் பேரில் வீட்டிற்குள் சென்று போலீசார் பேசிக் கொண்டிருந்தபோது, அடுப்பில் வெந்நீர் கொதித்ததைக் கண்டு ஸ்டவை அணைக்கச் சென்ற பெண், வெந்நீர் பாத்திரத்தை கையில் எடுத்தார்.

இதையடுத்து, பாத்திரத்தை கீழே வைக்குமாறு கேரிசன் என்ற அதிகாரி சப்தமிட்டு கொண்டே அப் பெண்ணை சுட்டுக் கொன்றார். சம்பவத்தின்போது அங்கிருந்த போலீசாரின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சியை இல்லினாய்ஸ் போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments